القلم

Al-Qalam (The Pen)

Meccan · 52 verses

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Reading settings
28
16

نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ

Nun By the pen! By all they write!

M.A.S. Abdel Haleem

நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக!

Abdul Hameed Baqavi

مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ

Your Lord’s grace does not make you [Prophet] a madman:

M.A.S. Abdel Haleem

(நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல.

Abdul Hameed Baqavi

وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ

you will have a never-ending reward––

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது.

Abdul Hameed Baqavi

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

truly you have a strong character––

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.

Abdul Hameed Baqavi

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ

and soon you will see, as will they,

M.A.S. Abdel Haleem

6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.

Abdul Hameed Baqavi

بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ

which of you is afflicted with madness.

M.A.S. Abdel Haleem

6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.

Abdul Hameed Baqavi

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ

Your Lord knows best who strays from His path and who is rightly guided.

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்.

Abdul Hameed Baqavi

فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ

So do not yield to those who deny the truth––

M.A.S. Abdel Haleem

ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!

Abdul Hameed Baqavi

وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ

they want you to compromise with them and then they will compromise with you––

M.A.S. Abdel Haleem

(கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்.

Abdul Hameed Baqavi

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ

do not yield to any contemptible swearer,

M.A.S. Abdel Haleem

(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.

Abdul Hameed Baqavi

هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ

to any backbiter, slander-monger,

M.A.S. Abdel Haleem

(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்.

Abdul Hameed Baqavi

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ

or hinderer of good, to anyone who is sinful, aggressive,

M.A.S. Abdel Haleem

(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி;

Abdul Hameed Baqavi

عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ

coarse, and on top of all that, an imposter.

M.A.S. Abdel Haleem

கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட.

Abdul Hameed Baqavi

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ

Just because he has wealth and sons,

M.A.S. Abdel Haleem

ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),

Abdul Hameed Baqavi

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

when our revelations are recited to him, he says, ‘These are just ancient fables.’

M.A.S. Abdel Haleem

நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்.

Abdul Hameed Baqavi

سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ

We shall brand him on the snout!

M.A.S. Abdel Haleem

(என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம்.

Abdul Hameed Baqavi

إِنَّا بَلَوْنَـٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ

We have tried them as We tried the owners of a certain garden, who swore that they would harvest its fruits in the morning

M.A.S. Abdel Haleem

(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.

Abdul Hameed Baqavi

وَلَا يَسْتَثْنُونَ

and made no allowance [for the Will of God]:

M.A.S. Abdel Haleem

எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.

Abdul Hameed Baqavi

فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ

a disaster from your Lord struck the garden as they slept

M.A.S. Abdel Haleem

ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது.

Abdul Hameed Baqavi

فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ

and by morning it was stripped bare, a desolate land.

M.A.S. Abdel Haleem

பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.

Abdul Hameed Baqavi

فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ

Still they called each other at daybreak,

M.A.S. Abdel Haleem

(அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து,

Abdul Hameed Baqavi

أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَـٰرِمِينَ

‘Go early to your field if you wish to gather all its fruits,’

M.A.S. Abdel Haleem

‘‘நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்'' (என்றும் கூறிக் கொண்டார்கள்).

Abdul Hameed Baqavi

فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَـٰفَتُونَ

and went off, whispering,

M.A.S. Abdel Haleem

(தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்.

Abdul Hameed Baqavi

أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ

‘Make sure no poor person enters the garden today!’––

M.A.S. Abdel Haleem

(யாசகம் கேட்கக்கூடிய) ஏழை ஒருவர் (கூட) உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழையாதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்).

Abdul Hameed Baqavi

وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَـٰدِرِينَ

they left early, bent on their purpose-

M.A.S. Abdel Haleem

தங்கள் எண்ணத்தில் (தங்களுடன் ஓர் ஏழையும் வராது) தடுத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்.

Abdul Hameed Baqavi

فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ

but when they saw the garden, they said, ‘We must have lost our way!

M.A.S. Abdel Haleem

(சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்.

Abdul Hameed Baqavi

بَلْ نَحْنُ مَحْرُومُونَ

No- we are ruined!’

M.A.S. Abdel Haleem

(பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).

Abdul Hameed Baqavi

قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ

The wisest of them said, ‘Did I not say to you, “Will you not glorify God?”’-

M.A.S. Abdel Haleem

அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்.

Abdul Hameed Baqavi

قَالُوا۟ سُبْحَـٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ

they said, ‘Glory be to God, Our Lord! Truly, we were doing wrong!’-

M.A.S. Abdel Haleem

அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்தமானவன்; நிச்சயமாக நாங்கள்தான் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்'' என்று கூறி,

Abdul Hameed Baqavi

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَـٰوَمُونَ

and then they turned to each other in mutual reproach.

M.A.S. Abdel Haleem

பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்.

Abdul Hameed Baqavi

قَالُوا۟ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَـٰغِينَ

They said, ‘Alas for us! We have done terrible wrong,

M.A.S. Abdel Haleem

‘‘நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்'' என்று அவர்கள் கூறினர்.

Abdul Hameed Baqavi

عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

but maybe our Lord will give us something better in its place: we truly turn to Him in hope.’

M.A.S. Abdel Haleem

‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்).

Abdul Hameed Baqavi

كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Such is the punishment [in this life], but greater still is the punishment in the Hereafter, if only they knew.

M.A.S. Abdel Haleem

(நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Abdul Hameed Baqavi

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

There will be Gardens of bliss for those who are mindful of God.

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக, இறையச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உண்டு.

Abdul Hameed Baqavi

أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ

Should We treat those who submit to Us as We treat those who do evil?

M.A.S. Abdel Haleem

(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா?

Abdul Hameed Baqavi

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

What is the matter with you? On what basis do you judge?

M.A.S. Abdel Haleem

உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்?

Abdul Hameed Baqavi

أَمْ لَكُمْ كِتَـٰبٌ فِيهِ تَدْرُسُونَ

Do you have a Scripture that tells you

M.A.S. Abdel Haleem

அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா?

Abdul Hameed Baqavi

إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

that you will be granted whatever you choose?

M.A.S. Abdel Haleem

நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா?

Abdul Hameed Baqavi

أَمْ لَكُمْ أَيْمَـٰنٌ عَلَيْنَا بَـٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ

Have you received from Us solemn oaths, binding to the Day of Resurrection, that you will get whatever you yourselves decide?

M.A.S. Abdel Haleem

அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா?

Abdul Hameed Baqavi

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ

Ask them [Prophet] which of them will guarantee this.

M.A.S. Abdel Haleem

(நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி?

Abdul Hameed Baqavi

أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ

Do they have ‘partners’ [besides God]? Let them produce their ‘partners’, if what they say is true.

M.A.S. Abdel Haleem

அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்.

Abdul Hameed Baqavi

يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ

On the Day when matters become dire, they will be invited to prostrate themselves but will be prevented from doing so,

M.A.S. Abdel Haleem

கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.

Abdul Hameed Baqavi

خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَـٰلِمُونَ

and their eyes will be downcast and they will be overwhelmed with shame: they were invited to prostrate themselves when they were safe [but refused].

M.A.S. Abdel Haleem

அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.)

Abdul Hameed Baqavi

فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ

So [Prophet] leave those who reject this revelation to Me: We shall lead them on, step by step, in ways beyond their knowledge;

M.A.S. Abdel Haleem

ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்.

Abdul Hameed Baqavi

وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ

I will allow them more time, for My plan is powerful.

M.A.S. Abdel Haleem

(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)

Abdul Hameed Baqavi

أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ

Do you demand some reward from them that would burden them with debt?

M.A.S. Abdel Haleem

(நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா?

Abdul Hameed Baqavi

أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ

Do they have knowledge of the unseen that enables them to write it down?

M.A.S. Abdel Haleem

அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா?

Abdul Hameed Baqavi

فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ

Wait patiently [Prophet] for your Lord’s judgement: do not be like the man in the whale who called out in distress:

M.A.S. Abdel Haleem

(நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!

Abdul Hameed Baqavi

لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ

if his Lord’s grace had not reached him, he would have been left, abandoned and blameworthy, on the barren shore,

M.A.S. Abdel Haleem

அவருடைய இறைவனின் அருள் அவரை அடையாதிருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்.

Abdul Hameed Baqavi

فَٱجْتَبَـٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ

but his Lord chose him and made him one of the Righteous.

M.A.S. Abdel Haleem

(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கிவைத்தான்.

Abdul Hameed Baqavi

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَـٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ

The disbelievers almost strike you down with their looks when they hear the Quran. They say, ‘He must be mad!’

M.A.S. Abdel Haleem

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.

Abdul Hameed Baqavi

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

but truly it is nothing other than a Reminder for all peoples.

M.A.S. Abdel Haleem

(நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.

Abdul Hameed Baqavi

Al-Qalam (The Pen) · 52 verses