الشعراء
Ash-Shu'ara (The Poets)
Meccan · 227 verses
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Reading settings
طسٓمٓ
Ta Sin Mim
M.A.S. Abdel Haleem
2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
Abdul Hameed Baqavi
تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ
These are the verses of the Scripture that makes things clear:
M.A.S. Abdel Haleem
2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
Abdul Hameed Baqavi
لَعَلَّكَ بَـٰخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ
[Prophet], are you going to worry yourself to death because they will not believe?
M.A.S. Abdel Haleem
(நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்!
Abdul Hameed Baqavi
إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةً فَظَلَّتْ أَعْنَـٰقُهُمْ لَهَا خَـٰضِعِينَ
If We had wished, We could have sent them down a sign from heaven, at which their necks would stay bowed in utter humility.
M.A.S. Abdel Haleem
நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
Abdul Hameed Baqavi
وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ ٱلرَّحْمَـٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ
Whenever they are brought a new revelation from the Lord of Mercy, they turn away:
M.A.S. Abdel Haleem
ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
Abdul Hameed Baqavi
فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَـٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
they deny it, but the truth of what they scorned will soon hit them.
M.A.S. Abdel Haleem
(ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.
Abdul Hameed Baqavi
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
Do they not see the earth, and what noble kinds of thing We grow in it?
M.A.S. Abdel Haleem
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
There truly is a sign in this, though most of them do not believe:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான்.
Abdul Hameed Baqavi
وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
Your Lord called to Moses: ‘Go to those wrongdoers,
M.A.S. Abdel Haleem
(நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக.
Abdul Hameed Baqavi
قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
the people of Pharaoh. Will they not take heed?’
M.A.S. Abdel Haleem
‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்.)
Abdul Hameed Baqavi
قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Moses said, ‘My Lord, I fear they will call me a liar,
M.A.S. Abdel Haleem
அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார்.
Abdul Hameed Baqavi
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَـٰرُونَ
and I will feel stressed and tongue-tied, so send Aaron too;
M.A.S. Abdel Haleem
இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!
Abdul Hameed Baqavi
وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
besides, they have a chargeagainst me, and I fear they may kill me.’
M.A.S. Abdel Haleem
மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்).
Abdul Hameed Baqavi
قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَـٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
God said, ‘No [they will not]. Go, both of you, with Our signs––We shall be with you, listen-ing.
M.A.S. Abdel Haleem
அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
Abdul Hameed Baqavi
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Go, both of you, to Pharaoh and say, “We bring a message from the Lord of the Worlds:
M.A.S. Abdel Haleem
ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.''
Abdul Hameed Baqavi
أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
let the Children of Israel leave with us.” ’
M.A.S. Abdel Haleem
ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.)
Abdul Hameed Baqavi
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
Pharaoh said, ‘Did we not bring you up as a child among us? Did you not stay with us for many years?
M.A.S. Abdel Haleem
(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்.
Abdul Hameed Baqavi
وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَـٰفِرِينَ
And then you committed that crime of yours: you were so ungrateful.’
M.A.S. Abdel Haleem
நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான்.
Abdul Hameed Baqavi
قَالَ فَعَلْتُهَآ إِذًا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Moses replied, ‘I was misguided when I did it
M.A.S. Abdel Haleem
அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன்.
Abdul Hameed Baqavi
فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ
and I fled from you in fear; later my Lord gave me wisdom and made me one of His messengers.
M.A.S. Abdel Haleem
ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்.
Abdul Hameed Baqavi
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
And is this- that you have enslaved the Children of Israel- the favour with which you reproach me?’
M.A.S. Abdel Haleem
ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்.)
Abdul Hameed Baqavi
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَـٰلَمِينَ
Pharaoh asked, ‘What is this “Lord of the Worlds”?’
M.A.S. Abdel Haleem
‘‘ உலகத்தாரின் இறைவன் யார்?'' என ஃபிர்அவ்ன் கேட்டான்.
Abdul Hameed Baqavi
قَالَ رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Moses replied, ‘He is the Lord of the heavens and earth and everything between them. If you would only have faith!’
M.A.S. Abdel Haleem
அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ
Pharaoh said to those present, ‘Do you hear what he says?’
M.A.S. Abdel Haleem
அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான்.
Abdul Hameed Baqavi
قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
Moses said, ‘He is your Lord and the Lord of your forefathers.’
M.A.S. Abdel Haleem
அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
Pharaoh said, ‘This messenger who has been sent to you is truly possessed.’
M.A.S. Abdel Haleem
அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்.
Abdul Hameed Baqavi
قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
Moses continued, ‘Lord of the East and West and everything between them. If you would only use your reason!’
M.A.S. Abdel Haleem
அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَـٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
But Pharaoh said [to him], ‘If you take any god other than me, I will throw you into prison,’
M.A.S. Abdel Haleem
அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்.
Abdul Hameed Baqavi
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِينٍ
and Moses asked, ‘Even if I show you something convincing?’
M.A.S. Abdel Haleem
அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார்.
Abdul Hameed Baqavi
قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
‘Show it then,’ said Pharaoh, ‘if you are telling the truth.’
M.A.S. Abdel Haleem
அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
Abdul Hameed Baqavi
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ
So Moses threw down his staff and- lo and behold!- it became a snake for everyone to see.
M.A.S. Abdel Haleem
ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.
Abdul Hameed Baqavi
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ
Then he drew out his hand and- lo and behold!- it was white for the onlookers to see.
M.A.S. Abdel Haleem
மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.
Abdul Hameed Baqavi
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ
Pharaoh said to the counsellors around him, ‘This man is a learned sorcerer!
M.A.S. Abdel Haleem
(இதைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்த பிரதானிகளை நோக்கி, ‘‘நிச்சயமாக இவர் தேர்ச்சிபெற்ற சூனியக்காரராக இருக்கிறார்.
Abdul Hameed Baqavi
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ
He means to use his sorcery to drive you out of your land! What do you suggest?’
M.A.S. Abdel Haleem
இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்.
Abdul Hameed Baqavi
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
They answered, ‘Delay him and his brother for a while, and send messengers to all the cities
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.
Abdul Hameed Baqavi
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
to bring every accomplished sorcerer to you.’
M.A.S. Abdel Haleem
தேர்ச்சிபெற்ற சூனியக்காரர்கள் அனைவரையும் அவர்கள் (தேடிப் பிடித்து) உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
The sorcerers were [to be] assembled at the appointed time on a certain day
M.A.S. Abdel Haleem
(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
Abdul Hameed Baqavi
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
and the people were asked, "Are you all coming?
M.A.S. Abdel Haleem
எல்லா மனிதர்களுக்கும், ‘‘ (குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?'' என்று பறைசாற்றப்பட்டது.
Abdul Hameed Baqavi
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ
We may follow the sorcerers if they win!"
M.A.S. Abdel Haleem
(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது).
Abdul Hameed Baqavi
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ
When the sorcerers came, they said to Pharaoh, ‘Shall we be rewarded if we win?’
M.A.S. Abdel Haleem
சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
and he said, ‘Yes, and you will join my inner court.’
M.A.S. Abdel Haleem
அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்.
Abdul Hameed Baqavi
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
Moses said to them, ‘Throw down whatever you will.’
M.A.S. Abdel Haleem
அவர்களை நோக்கி மூஸா ‘‘ நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்'' எனக் கூறினார்.
Abdul Hameed Baqavi
فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَـٰلِبُونَ
They threw their ropes and staffs, saying, ‘By Pharaoh’s might, we shall be victorious.’
M.A.S. Abdel Haleem
ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
But Moses threw his staff and- lo and behold!- it swallowed up their trickery
M.A.S. Abdel Haleem
பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது.
Abdul Hameed Baqavi
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ
and the sorcerers fell down on their knees,
M.A.S. Abdel Haleem
இதைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து,
Abdul Hameed Baqavi
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
exclaiming, ‘We believe in the Lord of the Worlds,
M.A.S. Abdel Haleem
‘‘ உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
Abdul Hameed Baqavi
رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ
the Lord of Moses and Aaron.’
M.A.S. Abdel Haleem
அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
Pharaoh said, ‘How dare you believe in him before I have given you permission? He must be the master who taught you sorcery! Soon you will see: I will cut off your alternate hands and feet and then crucify the lot of you!’
M.A.S. Abdel Haleem
அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
‘That will do us no harm,’ they said, ‘for we are sure to return to our Lord.
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்.
Abdul Hameed Baqavi
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَـٰيَـٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ
We hope that our Lord will forgive us our sins, as we were the first to believe.’
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.''
Abdul Hameed Baqavi
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Then We revealed Our will to Moses, ‘Leave with My servants by night, for you will be pursued!’
M.A.S. Abdel Haleem
பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்).
Abdul Hameed Baqavi
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
Pharaoh sent messengers into the cities, proclaiming,
M.A.S. Abdel Haleem
(அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து,
Abdul Hameed Baqavi
إِنَّ هَـٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
‘These people are a puny band––
M.A.S. Abdel Haleem
‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)
Abdul Hameed Baqavi
وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ
they have enraged us-
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
Abdul Hameed Baqavi
وَإِنَّا لَجَمِيعٌ حَـٰذِرُونَ
and we are a large army, on the alert.’
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.)
Abdul Hameed Baqavi
فَأَخْرَجْنَـٰهُم مِّن جَنَّـٰتٍ وَعُيُونٍ
So it was that We made them leave their gardens and their springs,
M.A.S. Abdel Haleem
(இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம்.
Abdul Hameed Baqavi
وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
their treasures and their noble dwellings-
M.A.S. Abdel Haleem
(இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்).
Abdul Hameed Baqavi
كَذَٰلِكَ وَأَوْرَثْنَـٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
We gave [such] things [later]to the Children of Israel.
M.A.S. Abdel Haleem
இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம்.
Abdul Hameed Baqavi
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
Pharaoh and his people pursued them at sunrise,
M.A.S. Abdel Haleem
சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
Abdul Hameed Baqavi
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَـٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ
and as soon as the two sides came within sight of one another, Moses’ followers said, ‘We shall definitely be caught.’
M.A.S. Abdel Haleem
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ
Moses said, ‘No, my Lord is with me: He will guide me,’
M.A.S. Abdel Haleem
அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்.
Abdul Hameed Baqavi
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ
and We revealed to Moses: ‘Strike the sea with your staff.’ It parted- each side like a mighty mountain-
M.A.S. Abdel Haleem
ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது.
Abdul Hameed Baqavi
وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ
and We brought the others to that place:
M.A.S. Abdel Haleem
(பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்.
Abdul Hameed Baqavi
وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ
We saved Moses and all his companions,
M.A.S. Abdel Haleem
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
Abdul Hameed Baqavi
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
and drowned the rest.
M.A.S. Abdel Haleem
பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
There truly is a sign in this, though most of them do not believe:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
Abdul Hameed Baqavi
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ
Tell them the story of Abraham,
M.A.S. Abdel Haleem
(நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக.
Abdul Hameed Baqavi
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ
when he asked his father and his people, ‘What do you worship?’
M.A.S. Abdel Haleem
அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு,
Abdul Hameed Baqavi
قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَـٰكِفِينَ
They said, ‘We worship idols, and are constantly in attendance on them.’
M.A.S. Abdel Haleem
அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
He asked, ‘Do they hear you when you call?
M.A.S. Abdel Haleem
அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?
Abdul Hameed Baqavi
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
Do they help or harm you?’
M.A.S. Abdel Haleem
அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
They replied, ‘No, but this is what we saw our fathers doing.’
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
Abraham said, ‘Those idols you have worshipped,
M.A.S. Abdel Haleem
நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார்.
Abdul Hameed Baqavi
أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ
you and your forefathers,
M.A.S. Abdel Haleem
நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்).
Abdul Hameed Baqavi
فَإِنَّهُمْ عَدُوٌّ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَـٰلَمِينَ
are my enemies; not so the Lord of the Worlds,
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்.
Abdul Hameed Baqavi
ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
who created me. It is He who guides me;
M.A.S. Abdel Haleem
அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.
Abdul Hameed Baqavi
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ
He who gives me food and drink;
M.A.S. Abdel Haleem
அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.
Abdul Hameed Baqavi
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
He who cures me when I am ill;
M.A.S. Abdel Haleem
நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
Abdul Hameed Baqavi
وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ
He who will make me die and then give me life again;
M.A.S. Abdel Haleem
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.
Abdul Hameed Baqavi
وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ
and He who will, I hope, forgive my faults on the Day of Judgement.
M.A.S. Abdel Haleem
கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.
Abdul Hameed Baqavi
رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ
My Lord, grant me wisdom; join me with the righteous;
M.A.S. Abdel Haleem
என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!
Abdul Hameed Baqavi
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ
give me a good name among later generations;
M.A.S. Abdel Haleem
பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
Abdul Hameed Baqavi
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
make me one of those given the Garden of Bliss-
M.A.S. Abdel Haleem
இன்ப சுகத்தையுடைய சொர்க்கத்தின் வாரிசுகளிலும் என்னை நீ ஆக்கிவைப்பாயாக!
Abdul Hameed Baqavi
وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
forgive my father, for he is one of those who have gone astray-
M.A.S. Abdel Haleem
என் தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்.
Abdul Hameed Baqavi
وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ
and do not disgrace me on the Day when all people are resurrected:
M.A.S. Abdel Haleem
(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!
Abdul Hameed Baqavi
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
the Day when neither wealth nor children can help,
M.A.S. Abdel Haleem
அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா.
Abdul Hameed Baqavi
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
when the only one who will be saved is the one who comes before God with a heart devoted to Him.’
M.A.S. Abdel Haleem
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
Abdul Hameed Baqavi
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
When the Garden is brought near to the righteous
M.A.S. Abdel Haleem
இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.
Abdul Hameed Baqavi
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
and the Fire is placed in full view of the misguided,
M.A.S. Abdel Haleem
வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்.
Abdul Hameed Baqavi
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
it will be said to them, ‘Where are those you worshipped
M.A.S. Abdel Haleem
அவர்களை நோக்கி ‘‘ அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே?
Abdul Hameed Baqavi
مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
beside God? Can they help you now, or even help themselves?’
M.A.S. Abdel Haleem
(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்.
Abdul Hameed Baqavi
فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ
and then they will all be hurled into Hell, together with those that misled them,
M.A.S. Abdel Haleem
95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
Abdul Hameed Baqavi
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
and all Iblis’s supporters.
M.A.S. Abdel Haleem
95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
There they will say to their gods, as they bicker among themselves,
M.A.S. Abdel Haleem
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
Abdul Hameed Baqavi
تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ
‘We were clearly misguided
M.A.S. Abdel Haleem
‘‘ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,)
Abdul Hameed Baqavi
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
when we made you equal with the Lord of the Worlds.
M.A.S. Abdel Haleem
(தங்கள் தெய்வங்களை நோக்கி) ‘‘ உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்!
Abdul Hameed Baqavi
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ
It was the evildoers who led us astray,
M.A.S. Abdel Haleem
(பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.
Abdul Hameed Baqavi
فَمَا لَنَا مِن شَـٰفِعِينَ
and now we have no intercessor
M.A.S. Abdel Haleem
எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
Abdul Hameed Baqavi
وَلَا صَدِيقٍ حَمِيمٍ
and no true friend.
M.A.S. Abdel Haleem
(எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே!
Abdul Hameed Baqavi
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
If only we could live our lives again, we would be true believers!’
M.A.S. Abdel Haleem
நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள்.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
There truly is a sign in this, though most of them do not believe:
M.A.S. Abdel Haleem
மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவனே (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Abdul Hameed Baqavi
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
The people of Noah, too, called the messengers liars.
M.A.S. Abdel Haleem
நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Abdul Hameed Baqavi
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Their brother Noah said to them, ‘Will you not be mindful of God?
M.A.S. Abdel Haleem
அவர்களின் சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறினார்: ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?
Abdul Hameed Baqavi
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
I am a faithful messenger sent to you:
M.A.S. Abdel Haleem
மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
be mindful of God and obey me.
M.A.S. Abdel Haleem
ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
Abdul Hameed Baqavi
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
I ask no reward of you, for my only reward is with the Lord of the Worlds:
M.A.S. Abdel Haleem
(இதற்காக) நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கின்றன.
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
be mindful of God and obey me.’
M.A.S. Abdel Haleem
ஆதலால், நீங்கள் (அந்த) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்'' (என்று கூறினார்.)
Abdul Hameed Baqavi
۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
They answered, ‘Why should we believe you when the worst sort of people follow you?’
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
He said, ‘What knowledge do I have of what they used to do?
M.A.S. Abdel Haleem
அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்,
Abdul Hameed Baqavi
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ
It is for my Lord alone to bring them to account- if only you could see-
M.A.S. Abdel Haleem
(இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
Abdul Hameed Baqavi
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
I will not drive believers away.
M.A.S. Abdel Haleem
நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.
Abdul Hameed Baqavi
إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
I am here only to give people a clear warning.’
M.A.S. Abdel Haleem
பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ
So they said, ‘Noah, if you do not stop this, you will be stoned.’
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ
He said, ‘My Lord, my people have rejected me,
M.A.S. Abdel Haleem
அதற்கவர், ‘‘ என் இறைவனே! என் (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.''
Abdul Hameed Baqavi
فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
so make a firm judgement between me and them, and save me and my believing followers.’
M.A.S. Abdel Haleem
ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.
Abdul Hameed Baqavi
فَأَنجَيْنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
So We saved him and his followers in the fully laden ship,
M.A.S. Abdel Haleem
ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்.
Abdul Hameed Baqavi
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
and drowned the rest.
M.A.S. Abdel Haleem
இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
There truly is a sign in this, though most of them do not believe:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன் மகா கருணையுடையவன்.
Abdul Hameed Baqavi
كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ
The people of Ad, too, called the messengers liars.
M.A.S. Abdel Haleem
‘‘ ஆது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Abdul Hameed Baqavi
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
Their brother Hud said to them, ‘Will you not be mindful of God?
M.A.S. Abdel Haleem
அவர்களுடைய சகோதரர் ‘ஹூது' அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?
Abdul Hameed Baqavi
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
I am a faithful messenger sent to you:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்;
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
be mindful of God and obey me.
M.A.S. Abdel Haleem
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Abdul Hameed Baqavi
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
I ask no reward of you, for my only reward is with the Lord of the Worlds.
M.A.S. Abdel Haleem
இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கிறது.
Abdul Hameed Baqavi
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةً تَعْبَثُونَ
How can you be so vain that you set up monuments on every high place?
M.A.S. Abdel Haleem
உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை நீங்கள் வீணாகக் கட்டுகிறீர்களே!
Abdul Hameed Baqavi
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
Do you build fortresses because you hope to be immortal?
M.A.S. Abdel Haleem
நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள்.
Abdul Hameed Baqavi
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
Why do you act like tyrants whenever you attack someone?
M.A.S. Abdel Haleem
நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகிறீர்கள்.
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Be mindful of God and obey me;
M.A.S. Abdel Haleem
அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Abdul Hameed Baqavi
وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
be mindful of Him who has provided you with everything you know-
M.A.S. Abdel Haleem
உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்.
Abdul Hameed Baqavi
أَمَدَّكُم بِأَنْعَـٰمٍ وَبَنِينَ
He has given you livestock, sons,
M.A.S. Abdel Haleem
சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.
Abdul Hameed Baqavi
وَجَنَّـٰتٍ وَعُيُونٍ
gardens, springs-
M.A.S. Abdel Haleem
தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்).
Abdul Hameed Baqavi
إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
for I truly fear that the torment of a grievous day will overtake you.’
M.A.S. Abdel Haleem
(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ
They replied, ‘It makes no difference to us whether you warn us or not,
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே!
Abdul Hameed Baqavi
إِنْ هَـٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
for we only do what our forefathers used to do:
M.A.S. Abdel Haleem
(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமே தவிரவேறில்லை.
Abdul Hameed Baqavi
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
we shall not be punished.’
M.A.S. Abdel Haleem
(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட மாட்டோம்'' (என்று கூறினார்கள்)
Abdul Hameed Baqavi
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَـٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
They denounced him as a liar, and so We destroyed them. There truly is a sign in this, though most of them do not believe:
M.A.S. Abdel Haleem
மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Abdul Hameed Baqavi
كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
The people of Thamud, too, called the messengers liars.
M.A.S. Abdel Haleem
‘ஸமூது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Abdul Hameed Baqavi
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَـٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Their brother Salih said to them, ‘Will you not be mindful of God?
M.A.S. Abdel Haleem
அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்தை விட்டு விலகி) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா?''
Abdul Hameed Baqavi
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
I am a faithful messenger to you:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்.
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
be mindful of God and obey me.
M.A.S. Abdel Haleem
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Abdul Hameed Baqavi
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
I ask no reward from you, for my only reward is with the Lord of the Worlds.
M.A.S. Abdel Haleem
இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.''
Abdul Hameed Baqavi
أَتُتْرَكُونَ فِى مَا هَـٰهُنَآ ءَامِنِينَ
[Do you think] you will be left secure for ever in what you have here-
M.A.S. Abdel Haleem
இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா?
Abdul Hameed Baqavi
فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ
gardens, springs,
M.A.S. Abdel Haleem
(இங்குள்ள) தோட்டங்களிலும், நீர் ஊற்றுகளிலும்,
Abdul Hameed Baqavi
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
fields, palm trees laden with fruit-
M.A.S. Abdel Haleem
குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந் தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் (விட்டுவைக்கப்படுவீர்களா?)
Abdul Hameed Baqavi
وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَـٰرِهِينَ
carving your fine houses from the mountains?
M.A.S. Abdel Haleem
திறமைசாலிகளாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். (அதில் என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?)
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Be mindful of God and obey me:
M.A.S. Abdel Haleem
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Abdul Hameed Baqavi
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
do not obey those who are given to excess
M.A.S. Abdel Haleem
வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.
Abdul Hameed Baqavi
ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
and who spread corruption in the land instead of doing what is right.’
M.A.S. Abdel Haleem
அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
They said, ‘You are bewitched!
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) கூறினர்: ‘‘ உம்மீது எவரோ சூனியம் செய்துவிட்டார்கள். (ஆதலால், உமது புத்தி தடுமாறிவிட்டது.)
Abdul Hameed Baqavi
مَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
You are nothing but a man like us. Show us a sign, if you are telling the truth.’
M.A.S. Abdel Haleem
நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்.)
Abdul Hameed Baqavi
قَالَ هَـٰذِهِۦ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
He said, ‘Here is a camel. She should have her turn to drink and so should you, each on a specified day,
M.A.S. Abdel Haleem
அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது.
Abdul Hameed Baqavi
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
so do not harm her, or the punishment of a terrible day will befall you.’
M.A.S. Abdel Haleem
மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَـٰدِمِينَ
But they hamstrung her. In the morning they had cause to regret it:
M.A.S. Abdel Haleem
(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
Abdul Hameed Baqavi
فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
the punishment fell upon them. There truly is a sign in this, though most of them will not believe:
M.A.S. Abdel Haleem
ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Abdul Hameed Baqavi
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
The people of Lot, too, called the messengers liars.
M.A.S. Abdel Haleem
லூத்துடைய மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Abdul Hameed Baqavi
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Their brother Lot said to them, ‘Will you not be mindful of God?
M.A.S. Abdel Haleem
அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா?
Abdul Hameed Baqavi
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
I am a faithful messenger to you:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்.
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
be mindful of God and obey me.
M.A.S. Abdel Haleem
(ஆகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படியுங்கள்.
Abdul Hameed Baqavi
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
I ask no reward from you, for my only reward is with the Lord of the Worlds.
M.A.S. Abdel Haleem
இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.
Abdul Hameed Baqavi
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَـٰلَمِينَ
Must you, unlike [other] people, lust after males
M.A.S. Abdel Haleem
நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள) உலகத்தார்களில் ஆண்களிடமே செல்கிறீர்கள்.
Abdul Hameed Baqavi
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
and abandon the wives that God has created for you? You are exceeding all bounds,’
M.A.S. Abdel Haleem
உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ
but they replied, ‘Lot! If you do not stop this, you will be driven away.’
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்.
Abdul Hameed Baqavi
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
So he said, ‘I loathe what you do:
M.A.S. Abdel Haleem
அதற்கவர் ‘‘ நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுக்கிறேன்'' என்று கூறி,
Abdul Hameed Baqavi
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
Lord, save me and my family from what they are doing.’
M.A.S. Abdel Haleem
‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்.)
Abdul Hameed Baqavi
فَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
We saved him and all his family,
M.A.S. Abdel Haleem
ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
Abdul Hameed Baqavi
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ
except for an old woman who stayed behind,
M.A.S. Abdel Haleem
எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
Abdul Hameed Baqavi
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
then We destroyed the others,
M.A.S. Abdel Haleem
பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்.
Abdul Hameed Baqavi
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
and poured a rain of destruction down upon them. How dreadful that rain was for those who had been forewarned!
M.A.S. Abdel Haleem
அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
There truly is a sign in this, though most of them will not believe:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலான வர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Abdul Hameed Baqavi
كَذَّبَ أَصْحَـٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ
The forest-dwellers, too, called the messengers liars.
M.A.S. Abdel Haleem
(‘மத்யன்' என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Abdul Hameed Baqavi
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
Shuayb said to them, ‘Will you not be mindful of God?
M.A.S. Abdel Haleem
ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா?
Abdul Hameed Baqavi
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
I am a faithful messenger to you:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்.
Abdul Hameed Baqavi
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
be mindful of God and obey me.
M.A.S. Abdel Haleem
ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படியுங்கள்.
Abdul Hameed Baqavi
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
I ask no reward of you, for my only reward is with the Lord of the Worlds.
M.A.S. Abdel Haleem
இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தார்களின் இறைவனிடமே தவிர (வேறெவரிடமும்) இல்லை.”
Abdul Hameed Baqavi
۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ
Give full measure: do not sell others short.
M.A.S. Abdel Haleem
அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள். நீங்கள் (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.
Abdul Hameed Baqavi
وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ
Weigh with correct scales:
M.A.S. Abdel Haleem
சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
Abdul Hameed Baqavi
وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
do not deprive people of what is theirs. Do not spread corruption on earth.
M.A.S. Abdel Haleem
மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்.
Abdul Hameed Baqavi
وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ
Be mindful of God who created you and former generations,’
M.A.S. Abdel Haleem
உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்'' என்றும் கூறினார்.
Abdul Hameed Baqavi
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
but they replied, ‘You are bewitched!
M.A.S. Abdel Haleem
அதற்கவர்கள் கூறினர்: ‘‘ நீர் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்.
Abdul Hameed Baqavi
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَـٰذِبِينَ
You are nothing but a man like us. In fact we think you are a liar.
M.A.S. Abdel Haleem
நீர் நம்மைப்போன்ற மனிதரே தவிர வேறில்லை. நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கிறோம்.
Abdul Hameed Baqavi
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Make bits of the heavens fall down on us, if you are telling the truth.’
M.A.S. Abdel Haleem
நீர் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து சில துண்டுகளை நம்மீது விழவையுங்கள்'' (என்று கூறினார்கள்.)
Abdul Hameed Baqavi
قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
He said, ‘My Lord knows best what you do.’
M.A.S. Abdel Haleem
அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்.
Abdul Hameed Baqavi
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
They called him a liar, and so the torment of the Day of Shadow came upon them- it was the torment of a terrible day.
M.A.S. Abdel Haleem
(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
There truly is a sign in this, though most of them will not believe:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Abdul Hameed Baqavi
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
your Lord alone is the Almighty, the Merciful.
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Abdul Hameed Baqavi
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Truly, this Quran has been sent down by the Lord of the Worlds:
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது.
Abdul Hameed Baqavi
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ
the Trustworthy Spirit brought it down
M.A.S. Abdel Haleem
(இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்.
Abdul Hameed Baqavi
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ
to your heart [Prophet], so that you could bring warning
M.A.S. Abdel Haleem
(மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,
Abdul Hameed Baqavi
بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ
in a clear Arabic tongue.
M.A.S. Abdel Haleem
தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது).
Abdul Hameed Baqavi
وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ
This was foretold in the scriptures of earlier religions.
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக இதைப் பற்றிய முன்னறிவிப்பு முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது.
Abdul Hameed Baqavi
أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَـٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Is it not proof enough for them that the learned men of the Children of Israel have recognized it?
M.A.S. Abdel Haleem
இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா?
Abdul Hameed Baqavi
وَلَوْ نَزَّلْنَـٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ
If We had sent it down to someone who was not an Arab,
M.A.S. Abdel Haleem
(இவர்கள் விரும்புவதைப்போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதை இறக்கிவைத்து,
Abdul Hameed Baqavi
فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ
and he had recited it to them, they still would not have believed in it.
M.A.S. Abdel Haleem
அவர் இதை இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Abdul Hameed Baqavi
كَذَٰلِكَ سَلَكْنَـٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
So We make it pass straight through the hearts of the guilty:
M.A.S. Abdel Haleem
அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம்.
Abdul Hameed Baqavi
لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
they will not believe in it until they see the grievous torment,
M.A.S. Abdel Haleem
ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Abdul Hameed Baqavi
فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
which will suddenly hit them when they are not expecting it,
M.A.S. Abdel Haleem
அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.
Abdul Hameed Baqavi
فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ
and then they will say, ‘Can we have more time?’
M.A.S. Abdel Haleem
அச்சமயம் அவர்கள் ‘‘ எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?
Abdul Hameed Baqavi
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
How can they ask that Our punishment be brought to them sooner?
M.A.S. Abdel Haleem
‘‘ எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?'' என்று கூறுவார்கள்.
Abdul Hameed Baqavi
أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَـٰهُمْ سِنِينَ
Think, if we let them enjoy this life for some years
M.A.S. Abdel Haleem
(நபியே!) நீர் கவனித்தீரா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்திருந்தபோதிலும்,
Abdul Hameed Baqavi
ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
and then the promised torment came upon them,
M.A.S. Abdel Haleem
பின்னர், அவர்கள் பயமுறுத்தப்பட்டுவந்த வேதனை அவர்களை வந்தடைந்தால்,
Abdul Hameed Baqavi
مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
what good would their past enjoyment be to them?
M.A.S. Abdel Haleem
அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காதே!
Abdul Hameed Baqavi
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Never have We destroyed a town without sending down messengers to warn it,
M.A.S. Abdel Haleem
(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
Abdul Hameed Baqavi
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَـٰلِمِينَ
as a reminder from Us: We are never unjust.
M.A.S. Abdel Haleem
(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை.
Abdul Hameed Baqavi
وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَـٰطِينُ
It was not the jinn who brought down this Quran:
M.A.S. Abdel Haleem
(இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை.
Abdul Hameed Baqavi
وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
it is neither in their interests nor in their power,
M.A.S. Abdel Haleem
அது அவர்களுக்குத் தகுதியுமல்ல; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.
Abdul Hameed Baqavi
إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ
indeed they are prevented from overhearing it.
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர்கள் (இதை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப் பட்டிருக்கின்றனர்.
Abdul Hameed Baqavi
فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ
So [Prophet] do not invoke any gods beside God, or you will incur punishment.
M.A.S. Abdel Haleem
ஆதலால், (நபியே!) நீர் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்காதீர். (அழைத்தால்) அதனால் நீர் வேதனைக்குள்ளாவீர்.
Abdul Hameed Baqavi
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
Warn your nearest kinsfolk
M.A.S. Abdel Haleem
நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
Abdul Hameed Baqavi
وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
and lower your wing tenderly over the believers who follow you.
M.A.S. Abdel Haleem
உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக நடந்து)க் கொள்வீராக.
Abdul Hameed Baqavi
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ
If they disobey you, say, ‘I bear no responsibility for your actions.’
M.A.S. Abdel Haleem
ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் ‘‘ நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றிலிருந்து விலகி விட்டேன்'' என்று கூறி,
Abdul Hameed Baqavi
وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
Put your trust in the Almighty, the Merciful,
M.A.S. Abdel Haleem
கருணையாளன், அனைவரையும் மிகைத்தவன் (அல்லாஹ்) மீது நம்பிக்கை வைப்பீராக.
Abdul Hameed Baqavi
ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
who sees you when you stand up [for prayer]
M.A.S. Abdel Haleem
நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.
Abdul Hameed Baqavi
وَتَقَلُّبَكَ فِى ٱلسَّـٰجِدِينَ
and sees your movements among the worshippers:
M.A.S. Abdel Haleem
சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீர் அசைவதையும் அவன் பார்க்கிறான்.
Abdul Hameed Baqavi
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
He is the All Hearing, the All Knowing.
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவன்தான் அனைத்தையும் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்.
Abdul Hameed Baqavi
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَـٰطِينُ
Shall I tell you who the jinn come down to?
M.A.S. Abdel Haleem
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?
Abdul Hameed Baqavi
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
They come down to every lying sinner
M.A.S. Abdel Haleem
பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
Abdul Hameed Baqavi
يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَـٰذِبُونَ
who readily lends an ear to them, and most of them are liars:
M.A.S. Abdel Haleem
தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே!
Abdul Hameed Baqavi
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
only those who are lost in error follow the poets.
M.A.S. Abdel Haleem
கவிஞர்களை வழிகெட்டவர்கள்தான் பின்பற்றுகின்றனர்.
Abdul Hameed Baqavi
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍ يَهِيمُونَ
Do you not see how they rove aimlessly in every valley;
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
Abdul Hameed Baqavi
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
how they say what they do not do?
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர்கள், தாங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.
Abdul Hameed Baqavi
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
Not so those [poets] who believe, do good deeds, remember God often, and defend themselves after they have been wronged. The evildoers will find out what they will return to.
M.A.S. Abdel Haleem
(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
Abdul Hameed Baqavi